காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர் எந்தை
அருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே
Thursday, December 10, 2009
Wednesday, December 9, 2009
திருப்பள்ளிஎழுர்ச்சி
பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே
முழுதுமா னான் என ஆகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுத லரியசீர் அருட்பெரும்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே
முழுதுமா னான் என ஆகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுத லரியசீர் அருட்பெரும்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே
Subscribe to:
Posts (Atom)