காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர் எந்தை
அருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே
Thursday, December 10, 2009
Wednesday, December 9, 2009
திருப்பள்ளிஎழுர்ச்சி
பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே
முழுதுமா னான் என ஆகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுத லரியசீர் அருட்பெரும்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாம்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே
முழுதுமா னான் என ஆகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுத லரியசீர் அருட்பெரும்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே
Tuesday, November 24, 2009
ஞான சரியை
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து உற்று எழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே யன்று
வனைந்து வனைந்து யேதுதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தரும் இதுவே.
நிறைந்து நிறைந்து உற்று எழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே யன்று
வனைந்து வனைந்து யேதுதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தரும் இதுவே.
Thursday, November 19, 2009
Subscribe to:
Posts (Atom)