Thursday, December 10, 2009

வள்ளலார் பாடல்கள்

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர் எந்தை
அருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே

No comments:

Post a Comment